இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விளையாட்டு போட்டிகளில் எழுந்த “கைகுலுக்கல் சர்ச்சை” இப்போது கபடி மைதானத்தையும் எட்டியுள்ளது. மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கபடி பிரிவில், இந்திய இளம் கபடி அணி பாகிஸ்தானை 81-26 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்பே, டாஸ் நிகழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவம் சர்ச்சையாக மாறியது.
டாஸ் நேரத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டனுடன் கைகுலுக்காமல் இருந்த இந்திய கேப்டன் இஷாந்த் ரதி, எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார். போட்டி முடிந்த பிறகும் இரு அணிகளின் வீரர்களும் வழக்கம்போல கைகுலுக்க மறுத்ததால், “கைகுலுக்கல் சர்ச்சை” மீண்டும் தலைப்புச் செய்தியாக மாறியது.
இந்திய வீரர்களின் இந்த நடவடிக்கை, சமீபத்திய எல்லை பதட்டங்கள் மற்றும் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட நிகழ்வுகளின் பின்னணியில் வெளிப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.
🚨 BIG! Team India REFUSES to shake hands with Pakistan before the toss at the Asian Youth Games 2025.
Later, India CRUSHED Pakistan 81–26 in a one-sided Kabaddi match 🔥 pic.twitter.com/vrGGr52rOC
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 21, 2025
விளையாட்டு தரப்பில், இந்திய அணி தொடக்கம் முதலே முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே இந்தியா பாகிஸ்தானை இருமுறை ‘ஆல் அவுட்’ செய்து 20-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு பின்னர் மீள எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. பாதி நேர முடிவில் இந்தியா 43-12 என வலுவான முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதியிலும் இந்திய வீரர்கள் அதே ஆற்றலுடன் விளையாடினர். மாற்று ரைடர் மானவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக ஆறு புள்ளிகளைப் பெற்றார்; ரித்திக் சைனி நான்கு டேக்கிள்களால் இந்தியாவின் முன்னிலையை மேலும் வலுப்படுத்தினார். இறுதியில் இந்தியா 81-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் முன்னதாக, இந்திய அணி வங்கதேசத்தை 83-19 எனவும், இலங்கையை 89-16 எனவும் வீழ்த்தி தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது.
