சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹெட்போன் அணிந்து நடந்து செல்வதைக் காணலாம். எதிரே வேகமாக வருகிற மெட்ரோ ரயிலின் சத்தம் கூட அந்த பெண்ணுக்கு கேட்கவில்லை. இதன் காரணமாக, தவறுதலாக ரயிலின் பாதையில் நேருக்கு நேர் நின்றுவிட்டார்.
कान में हेडफोन की वजह से अभी जान चली जाती 👇 pic.twitter.com/wMG5tQ9wiC
— Md Ashfaque Alam (@ashfaque80035) October 14, 2025
அந்த தருணத்தில் பிளாட்பாரத்தில் காத்திருந்த ஒரு செக்யூரிட்டி காவலர் அதிரடியாக செயல்பட்டு, பாதையில் நின்ற அந்த பெண்ணை வேகமாக இழுத்து மேலே உயர்த்தினார். மெட்ரோ ரயில் பெண்ணுக்கு மிக அருகில் வந்திருந்ததால் சில விநாடிகள் தாமதமாக இருந்தாலும் ஒரு பேரதிர்ச்சி சம்பவமாகி இருப்பது உறுதி. இந்த பயங்கரமான காட்சி முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ வைரலானதுடன் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் நெருக்கடியான எதிர்வினைகளைத் தெரிவித்துள்ளனர். ஹெட்போன் அணிந்து மக்கள் செல்லும் பழக்கத்துக்கு கட்டுப்பாடு தேவை எனக் கூறுகிறார்கள். அதேசமயம், அந்த செக்யூரிட்டி காவலரின் தைரியம் மற்றும் விழிப்புணர்வுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. ஒரு நிமிடத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஒரு உயிரைக் காப்பாற்றியதற்கான நிஜ உதாரணம் இது.
