கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நடத்திய பொதுக்கூட்ட பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட  11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேலு உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், பலர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பரிதாப சம்பவத்தையடுத்து, மருத்துவமனையில் உறவினர்கள் தங்களது உயிரிழந்த உறவுகளை தேடிக் கதறி அழும் காட்சிகள் கோரமாக காணப்படுகின்றன. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறந்த மருத்துவ வசதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.