பெங்களூருவில் பாணத்தூர்–பாலகெரே சாலையின் மோசமான நிலை காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 20 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து, சேறு மற்றும் பள்ளம் நிறைந்த சாலையில் சிக்கி கவிழ்ந்தது.
குழந்தைகளை பின் கதவு வழியாக அவசரமாக மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் எடுத்த காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, குடியிருப்பாளர்களிடையே கடும் சீற்றத்தை தூண்டியுள்ளது.
Bengaluru’s roads are no longer just an inconvenience they are a full-blown danger to life. The crater-filled, slushy Panathur–Balagere stretch is a perfect example of the government’s negligence. This morning, a school bus carrying around 20 children nearly toppled over. The… pic.twitter.com/FfsnzMFf3r
— Karnataka Portfolio (@karnatakaportf) September 12, 2025
“>
சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் இந்த சாலையை ஆய்வு செய்திருந்த போதிலும், பழுதுபார்ப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் “குழந்தைகள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்” என பதிவுகள் பரவி, அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சாலை பராமரிப்பு பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
பலர் ஓட்டுநரின் கவனக்குறைவையும் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
