திருச்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாவட்ட கல்வி அலுவலர், CEO-விடம் ஆலோசனை இல்லாமல் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டார் என்பது தவறான செயலாகும். பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் அரசியல் நிகழ்ச்சி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்று இனி நிகழக்கூடாது என்பதில் நான் உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“>