சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் ஒரு பல மாடி குடியிருப்பின் 13வது மாடி பால்கனியில், இரண்டு சிறுவர்கள் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருப்பது அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது.
அதிலும், ஒரு சிறுவன் தொங்கியபடியே புல்-அப்கள் செய்வது மக்களின் மூச்சை நிறுத்தும் அளவுக்கு இருந்தது. வீடியோவின் இறுதியில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர்கள் இருவரும் நலமாக இருப்பார்கள் என நெட்டிசன்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மனதை பதறவைக்கும் காட்சியை அண்டை வீட்டுக்காரர் ஒருவர் பதிவு செய்து, Instagram இல் @nihaochongqing என்ற கணக்கில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“>
வீடியோவில் இரண்டு குழந்தைகளும் தண்டவாளத்தை உறுதியாகப் பிடித்திருந்தாலும், இத்தகைய ஆபத்தான செயல் பெற்றோரின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகின்றனர். “இவ்வளவு கவனக்குறைவான பெற்றோர்களை சிறையில் அடைக்க வேண்டும்” என ஒருவரும், “ஐயோ கடவுளே! இதைப் பார்த்ததும் என் உடல் முழுவதும் நடுங்கியது” என இன்னொருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். “குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?” என பலர் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெற்றோரின் பொறுப்பின்மை குறித்த விவாதத்தை அதிகரித்துள்ளது.
