உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கோழி வியாபாரி ஒருவரிடம் அவரது 2 ஊழியர்கள் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரி அவர்கள் இருவரையும் பெல்டால் தாக்கும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் ஷான் குரேஷி என்பவர் தனது இரண்டு ஊழியர்களை கடுமையாக தாக்குகிறார். இதையடுத்து ஷான் தனது ஊழியர்கள் மீது திருட்டுப் பழியையும் சுமத்தியுள்ளார். அதாவது கோழி பண்ணையிலிருந்து அவர்கள் கோழிகளை திரடியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.