கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு பணிக்கு சென்றிருந்தார். அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்த ஒரு 28 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்ந்து பழகி வந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அந்த பெண்ணை கடலூருக்கு சம்பத் அழைத்து சென்றுள்ளார். அங்கு 4 நாட்களாக ஒரு விடுதியில் அந்தப் பெண்ணை தங்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்தார்.

அதன்பிறகு அந்த இளம்பெண் அவரை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய நிலையில் அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததுடன் அந்த பெண்ணை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.