
உலக பணக்காரர்களில் ஒருவரும், பெரும் தொழிலதிபருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 10.25 லட்சம் கோடியாக உள்ளது.
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு சமீபத்தில் அவருடைய நிறுவனத்தில் பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டது. இவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பொறுப்புக்காக அவருக்கு ஆண்டுக்கு ரூபாய் 20 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோன்று வருமானத்திற்கு ஏற்ப கமிஷன் தொகையும் வழங்கப்பட உள்ளது.