சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 840 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72520 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9065 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 9065 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.