
சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த பெண் மூன்று மாதங்கள் மட்டுமே வேலை செய்துள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலம் கறிக்கடைக்காரர் அந்த பெண்ணுக்கு ரூபாய் 6 லட்சம் பணம், 8 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் என அனைத்தையும் கொடுத்துள்ளார். பின்பு அந்த பெண்ணிடம் தான் கொடுத்த பணம் மற்றும் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் திரும்பித் தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்தப் பெண் சொந்த ஊருக்கே சென்று விட்டார். இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி விருதாச்சலம் சென்ற கறிக்கடைக்காரர் மீண்டும் அந்த பெண்ணிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பணத்தை திருப்பி தர முடியாது என கூறிய அந்தப் பெண் தன்னுடைய மகனுடன் சேர்ந்து கறிக்கடைக்காரரை தாக்கி அவரது கழுத்தில் கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கறிக்கடைக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியதாவது, அந்தப் பெண் தன்னிடம் வேலை பார்க்கும் போது எனக்கு கணவர் கிடையாது. அதனால் நான் உங்களுடனே வாழ்ந்து விடுகிறேன். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறினார். இதனை நம்பிய கறிக்கடைக்காரர் பணம் மற்றும் வெள்ளி தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் என்னுடன் ஏற்பட்ட தகராறால் அந்த பெண் மீண்டும் அவருடைய சொந்த ஊருக்கே சென்றுள்ளார். அதன் பின்பு அந்த பெண்ணை பற்றி விசாரித்த போது இதற்கு முன்பு இந்த பெண் என்னைப் போன்று 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. எனவே அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது நான் இதுவரை ஒருவரை மட்டும் தான் திருமணம் செய்துள்ளேன். மற்ற ஐந்து பேரையும் திருமணம் செய்யவில்லை என கூறியுள்ளார். ஆனால் மற்ற 5 பேர்கள் அளித்த புகாரில் இந்த பெண் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பொய்கள் சொல்லி ஏமாற்றியது தெரியவந்தது. எனவே தொடர்ந்து அந்த பெண்ணிடம் 2-வது நாள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என போலீசார் முடிவு செய்துள்ளனர்.