சமீப காலங்களாக இணையதளங்களில் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் அல்லது சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. விலங்குகள் இயற்கையாகவே செய்யும் நடத்தைகள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன.

அவற்றைப் பார்ப்பது மக்களுக்கு மகிழ்ச்சியும், புத்துணர்வையும் தருவதாக உள்ளது. அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பறவை ஒன்று மீனை பிடிப்பதற்காக மனிதர்களைப் போன்று இறையை போட்டு மீனைப் பிடிக்க முயற்சிக்கிறது.

முதலில் அது தனது வாயில் உள்ள இரையை போட்டதும் ஒரு ஆமை அருகில் வந்தது உடனே அதை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்ற பறவை மீண்டும் அந்த இரையை தண்ணீரில் போட்டதும் வேகமாக வந்து ஒரு மீன் அந்த இரையைப் பிடிக்க முயலும் போது ஒரு நொடியில் மீனைப் பிடித்துக் கொண்டு பறவை பறந்து சென்றது.

இதுகுறித்த வீடியோ வெளியாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பறவையின் அசாத்தியமான திறமை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.