
“ஏங்க… கூமாபட்டிக்கு வாங்க” என்ற தங்கபாண்டி என்பவரின் இன்ஸ்டா ரீலால் வைரலான கூமாபட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கினர். தங்கப்பாண்டி “ரீல்ஸ்” எடுத்த பிளவக்கல் அணையில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே பொதுப்பணித்துறை அறிவித்தது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் எனவும், தடையை மீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சில வெளிநபர்கள் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிளவக்கல் அணைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து பொதுப்பணித்துறை தடை ஏற்படுத்தியுள்ளது.