
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போருக்கு இடைவேளையாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டி தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை நான் படுகொலையிலிருந்து காப்பாற்றினேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் செயல்படுகிறார்” என டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“போர்நிறைவு அறிவிக்கப்பட்ட பின், ஈரான் தலைவர் அயதுல்லா கமேனி ‘அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருப்பது உறுதி. அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது’ என தவறான கூறியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் உயிருடன் இருப்பதற்கே நான் தான் காரணம்.” என டிரம்ப் விமர்சித்துள்ளார்
“ஈரான், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்க முயற்சித்தால், அதை தடுப்பதற்காக அங்குள்ள முக்கிய இடங்களை குறிவைத்து குண்டுகள் வீச தயங்கமாட்டேன். அந்த நாட்டின் உயர்மட்டத் தலைவர் எங்கே தங்கியுள்ளார் என்பதையும் எனக்கு தெளிவாகத் தெரியும். ஆனால் உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அவரை கொல்ல அனுமதிக்க மாட்டேன்.” என எச்சரிக்கையோடு தெரிவித்தார்.
டிரம்ப் கூறிய இந்த கருத்துகள் தற்போது உலக நாடுகளில் வன்மையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஈரான் ஊடகங்கள் “அமெரிக்காவின் தலையீடு இல்லையெனில், இந்த துயர நிலை ஏற்பட்டிருக்காது” என குற்றம் சுமத்தி வருகின்றன. மற்றவொரு புறம், டிரம்பின் பேட்டி, எதிர்கால இராஜதந்திர உறவுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த பரபரப்பான உரையாடல், எதிர்வரும் அமெரிக்க தேர்தலிலும் முக்கிய அரசியல் ஆயுதமாக மாற்றப்படக்கூடும் என கூறப்படுகிறது.