திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்த வழக்கு திண்டுக்கல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 2 நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கிற்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதி, ராஜேந்திரன் மீது சாட்டப்பட்ட  குற்றம் முழுமையாக  நிரூபிக்கப்பட்டதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அந்த வழக்கில்  சம்பந்தபடுத்தப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.