
விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
அந்த வீடியோக்களில் மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாபட்டிக்கு வாங்க கூமாபட்டி ஒரு தனி தீவு இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர் என்று பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
இந்த வீடியோக்களை பார்த்த பலரும் கூமாபட்டியா? இது எங்க இருக்கு? எந்த ஊரு? என்று கூகுள் மேப்பில் தேடிப் பார்த்து அந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர். இளைஞர்கள் பலர் கூமாபட்டி எங்கு இருக்கிறது என வழிகளைத் தேட ஆரம்பித்தனர்.
அந்த வகையில் இணைய தேடுதலில் கூமாபட்டி என்ற கிராமம் முன்னிலையில் உள்ளது. இதனால் தமிழக அளவில் கூமாபட்டி கிராமம் மிகவும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த கிராமம் எங்கு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வந்திராயிருப்பு என்ற கிராமத்துக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.