
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த சில வாரங்களாக அடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் சூர்யகுமார் யாதவுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே குடல் இறக்க அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இந்தியா திரும்பிய சூரியகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு களத்திற்கு திரும்ப காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் கீழ் கேப்ஷனில் கீழ் வயிற்றில் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடையும் பாதையில் இருக்கிறேன். திரும்பி வர காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram