
இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் மரணம் உலகில் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது சாலை விபத்துக்கள், தற்கொலை. சமீபத்தில் இந்தியாவில் இளைஞர்கள் மரணத்துக்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இளைஞர்களின் மரணங்களில் 17.1% மரணங்கள் தற்கொலையாக உள்ளது. அதிலும் 15 முதல் 29 வயதிலான இளைஞர்களை அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. அதாவது அந்த 2 ஆண்டுகளுக்குள் உயிரிழந்த இளைஞர்களில் 6 பேரில் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
மீதமுள்ள 15.6% மரணங்கள் சாலை விபத்துக்களால் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து உலக அளவிலான சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாவது, அதாவது கடந்த 20 ஆண்டுகளாகவே இளைஞர்கள் மரணங்களில் தற்கொலைகளை மிக அதிக பங்கு வகிப்பது கூறப்படுகிறது. உலக இளைஞர்கள் மரணங்களில் தற்கொலை மூன்றாவது இடம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வயது இந்தியர்களின் மரணத்துக்கான காரணங்களில் முதல் 10 இடங்களில் தற்கொலை இல்லை. ஆனால் இளைஞர்களின் மரணங்களில் முதலிடம் வகிப்பது தற்கொலை. இந்த நிலைமை நீடித்தால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
எனவே உடனடியாக சமூகமும் அரசுகளும் இளைஞர்களின் தற்கொலை மரணங்களுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.