உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த நிஷாத் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சித்தாரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு முதல் இரவு அறைக்குள் நிஷாத் ஆசையாக நுழைந்த நிலையில் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது அங்கு கத்தியோடு இருந்த மணமகள் பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி உங்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறினார்.

அதன்பிறகு நான் வேறொருவருக்கு சொந்தம் எனவும் ஒருவேளை என்னை நீங்கள் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டி கொன்று விடுவேன் என்று அவரை மிரட்டினார். நான் என்னுடைய காதலன் அமனுக்குத்தான் சொந்தம் எனக்கூறி முக்காடுக்குள் கத்தியை வைத்து மிரட்டினார்.

இரவு முழுவதும் அதிர்ச்சியில் இருந்த நிஷாத் தூங்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இந்த சம்பவம் தொடர்ந்த நிலையில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தன் குடும்பத்தினரிடம் கூறினார். பின்னர் அந்த பெண்ணை அழைத்து குடும்பத்தினர் பேசிய நிலையில் பெற்றோர் வற்புறுத்தியதால்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பெற்றோர் சமரசம் பேசி கணவனுடன் வாழ அனுப்பி வைத்த நிலையில், நிஷாத் வீட்டில் இருந்து அந்த பெண் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளார். இதனால் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த பெண் தப்பி ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறும் போது அவர் திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒவ்வொரு இரவு உயிர் பயத்தில் தான் என்னுடைய தூக்கத்தை தொலைத்தேன். மேலும் அவர் திரும்பி வந்தால் கூட கண்டிப்பாக நான் அவளுடன் வாழ மாட்டேன் என்று கூறிவிட்டார்.