
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கிடையே ஏற்பட்ட சாதாரண சண்டை, பெற்றோர்களுக்கிடையே தீவிர மோதலாக மாறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
குழந்தைகள் விளையாடும் போது சின்னச் சண்டைகள் ஏற்படுவது வழமையான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், இந்தச் சம்பவத்தில் இரு பெற்றோர்களும் நேரில் மோதிக்கொண்டு, தங்களது கோபத்தை கட்டுக்கடங்காத அளவிற்கு வெளிப்படுத்தியதைக் காணலாம்.
Question for people in in apartment and closed communities
Do you have such individuals living in your apartments?
How do you manage and confront such people?
Also question to any psychiatrist watching this what is your view on such individuals? pic.twitter.com/2FsarWr89L— Woke Eminent (@WokePandemic) June 24, 2025
வீடியோவில், கருப்பு சட்டை அணிந்த ஒரு நபர், மற்றொரு பெற்றோரின் குழந்தை தனது மகனைக் “அடித்துவிட்டதாக ” சத்தமாக குற்றஞ்சாட்டுகிறார். இருப்பினும், மற்ற பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் “அவர்கள் எல்லோரும் சிறுவர்கள் தான்;
இது பெரிய விஷயம் கிடையாது” என சமாதானப்படுத்த முயற்சிக்க, அந்த நபர் தொடர்ந்து கூச்சலிட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. மத்தியில் நின்று ஒரு நபர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதும், மோதல் நீண்ட நேரம் தொடர்ந்தது.
இந்த வீடியோ, @gharkekalesh என்ற சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. பலரும், “குழந்தைகள் சண்டையிட்டால்தான் வளர்ச்சி, பெற்றோர்கள் தான் சிந்திக்க வேண்டும்”, “எதற்காக அவ்வளவு கோபம்?”, “அவர் மன அழுத்தத்தில் இருக்கக்கூடும்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.