தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜோலார்பேட்டையில் நடைபெறும் ரூ.273.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, காட்பாடி ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கியதில் இருந்து பொதுமக்கள் எனக்கு அளித்த வரவேற்பு மன நிம்மதியாக இருந்தது. எனவே 2026, 2031 மற்றும் 2036 ஆகிய ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தான் நடைபெறும்.

இதனை திருப்பத்தூர் மாவட்ட மக்கள் உணர்த்தியுள்ளனர். தமிழ்நாட்டில் விடுபட்ட பெண்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசால் கூட நம்முடைய வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் ‌9.69 சதவீதம் அளவிற்கு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் தொட்டுள்ளது என ஒன்றிய அரசே பாராட்டியுள்ளது. மேலும் அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தான் நடைபெறும் என்று அவர் கூறினார்.