
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல் பூண்டி கிராமத்தில் வேல்முருகன்-இளங்காளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ரேணுகாதேவி (24), சந்தியா மற்றும் சரண்யா ஆகிய மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் ரேணுகாதேவி பிகாம் முடித்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது ரேணுகாதேவி ஒருவரை காதலித்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இது தொடர்பாக ரேணுகா தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு திருமணம் செய்து வைக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.
இந்நிலையில் சம்பவநாளில் இரவு 7 மணி அளவில் ரேணுகாதேவி பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு நடந்து சென்றார். அவர் மேல் சீமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஏரிக்குள் குதித்து தற்கொலை செய்தார். முன்னதாக தங்கள் மகள் வீட்டை விட்டு செல்வதை அறிந்த பெற்றோர் பின்னால் சென்ற நிலையில் திடீரென அவர் ஏரிக்குள் இறங்கியதை பார்த்தனர்.
அவர்கள் தங்கள் மகளை தடுக்க முயற்சித்த போதிலும் அவர் கேட்காமல் இறங்கிவிட்டார். அவர்களும் ஏரிக்குள் இறங்கிய நிலையில் நீச்சல் தெரியாததால் ஒரு கட்டத்தில் வெளியே வந்து விட்டனர். ஆனால் நீருக்குள் ரேணுகா மூழ்கிவிட்ட நிலையில் தீயணைப்புத் துறையினற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடிய நிலையில் ரேணுகாவை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருட்டிவிட்டது. இதன் காரணமாக மறுநாள் காலை 6 மணி அளவில் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கிய நிலையில் 7 மணி அளவில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெற்றோரின் கண்முண்ணே மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.