
உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள தானா பகுதியில் செக்டர் 53 ல் 60 வயதான ராஜ்குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு இ ரிஷாவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது ரிஷாவில் இருந்து இறங்கிய அவர் ஓட்டுனருக்கு பணம் கொடுப்பதற்காக பையில் இருந்த பர்ஸை எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜ்குமாரியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக ராஜ்குமாரின் மகன் அஜித் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
यूपी : यूपी : नोएडा में बुजुर्ग महिला से छीनी चेन
◆ दो बदमाश बाइक पर सवार होकर आए और वारदात को अंजाम देकर हुए फरार
◆ पूरी घटना CCTV कैमरे में हुई कैद#Noida | #UttarPradesh | #NoidaPolice | #UPNews pic.twitter.com/ZgaAeaoV9i
— News24 (@news24tvchannel) June 25, 2025
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.