
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 2006ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கைதான பாமகவினர் 15 பேரை விடுதலை செய்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில், ராமதாஸ் சகோதரர் சீனுவாசன் உள்பட 20 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். சீனுவாசன் உள்பட 5 பேர் விசாரணையின் போதே மரணமடைந்தனர். மீதமுள்ள 15 பேரையும் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.