
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் உள்ள காமராஜர் வீதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்துள்ளார். அதோடு இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய பாலமுருகனை காமராஜர் வீதியில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மூன்று பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை வெட்டி கொன்றது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.