
சென்னையில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் செல்ல முடிகிறது. இதன் காரணமாக அவர்கள் நாள்தோறும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது கோயம்பேடு-அசோக் நகர் இடையே மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு பதில் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது.
சென்னை – கோயம்பேடு மற்றும் அசோக் நகர் – பரங்கிமலை இடையே எந்த பாதிப்பும் இல்லாததால் பயணிகள் இதற்கு ஏற்ப பயணத்தை திட்டமிடுமாறு மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது