
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் முனீஸ்வரன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான முனீஸ்வரன் கடந்த சில நாட்களாக தினமும் இரவு நேரத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அவரது மனைவி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே பலத்த தகராறு ஏற்பட்டது. இதில் மன அழுத்தத்திலிருந்த முனீஸ்வரன் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கையறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.