
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்து 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 6 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல் ராகுல் 47 ரன்களுடனும், கில் 6 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் களம் இறங்கிய போது அவர் 4 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்ததாக சாய் சுதர்சன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டநிலையில் 66 ரன்களை சேர்த்தனர்.
KL Rahul speaking Tamil.Accent is also so good 🤩❤️https://t.co/rERQBUoOWa
— Dinesh here 🙋♂️🇿🇦 (@dinesh_offl_06) June 22, 2025
48 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த போது பென் ஸ்டோக்ஸ் பந்து வீச க்ராவ்லியிடம் கேட்ச் கொடுத்து சாய் சுதர்சன் அவுட் ஆகினார். இந்நிலையில் பேட்டிங் செய்யும்போது சாய் சுதர்சன் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மைதானத்தில் பந்து நல்ல பவுன்ஸ் ஆகிறது என்பதை சாய் சுதர்சனிடம் கேஎல் ராகுல் கூற நினைத்தார். அதற்காக நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி என்றார். கே.எல் ராகுல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் தமிழில் கூறியதை கேட்டு சாய் சுதர்சனும் நிதானமாக விளையாடினார். மேலும் அவர் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.