சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று அதிவேகமாக ஒருவர் காரை ஓட்டி சென்றார். அந்த நபர் காவலர் மீது காரை ஏற்றுவது போல போக்கு காட்டி பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் அலட்சியமாக நடந்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிவேகமாக காரை ஓட்டி அலட்சியமாக நடந்து கொண்ட நபர் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக்(25) என்பது தெரியவந்தது.

அவர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அபிஷேக்குடன் காரில் பயணம் செய்த அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.