
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தெலிபாக் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 19 வயது சிறுமி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு வருடமாக அந்த சிறுமி திருமணமான பெண் ஒருவருடன் லெஸ்பியன் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, அந்தப் பெண் வீட்டிற்கு வந்திருந்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெண் அங்கிருந்து சென்ற பிறகு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன், அந்தச் சிறுமி இரத்தத்தால் சுவரில் “M+S” என எழுதி இருந்தது. இது, சிறுமியின் பெயரின் முதல் எழுத்தும், திருமணமான பெண்ணின் பெயரின் முதல் எழுத்தும் என போலீசார் தெரிவித்தனர். இந்த குறியீட்டின் பின்னணியை ஆராய்ந்த போலீசார், இருவரும் நீண்ட நாட்களாக நெருக்கமாக பழகி வந்தது மற்றும் மாறி மாறி வீட்டிற்கு வெளியே தங்கி வந்ததும் உறுதி செய்துள்ளனர். சிறுமியின் தந்தை, இந்த உறவை பலமுறை எதிர்த்தும், அவர்கள் அதை தொடர்ந்ததால் மனவேதனை அடைந்த மகள் உயிரை மாய்த்துகொண்டதாக கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவியல் குழுவினருடன் இணைந்து ஆதாரங்களை சேகரித்தனர். இதற்கிடையில், சிறுமியின் தந்தை, காவல்துறையினர் ஏற்கனவே புலனாய்வு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். தங்களது மனவேதனையை தெரிவித்த அவர், “பலமுறை காவல்துறையிடம் புகார் கொடுத்தும் உதவவில்லை. நான் சொல்வதை காவல்துறையினர் எளிதாக எடுத்தார்கள்” என வேதனையுடன் கூறியுள்ளார். தற்போது அந்த திருமணமான பெண்ணை மையமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.