
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் நிலையில் இங்கு எலினோஸ் லூயிஸ் என்ற 34 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்த நிலையில் தன்னுடைய வகுப்பில் உள்ள ஒரு மாணவரிடம் நன்றாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் அந்த மாணவன் பள்ளி படிப்பை முடிந்து கல்லூரியில் சேர்ந்த பிறகும் தொடர்ந்துள்ளது.
இவர்கள் இருவரும் தினசரி பேசி பழகிய நிலையில் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகமான நிலையில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கவும் ஆரம்பித்தனர். இது அந்த மாணவனின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
அந்தப் புகாரின் படி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.0