இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிகப்பெரிய பாம்புடன் விளையாடும் காட்சி வெளியாகி உள்ளது. ஒரு வாலிபர் அந்த பாம்பின் தலையின் மீது தனது கைகளை வைக்கிறார். இதையடுத்து உடனடியாக அந்த பாம்பு தனது வாயை திறக்கிறது. ஆனால் அவரை ஒன்றும் செய்யவில்லை.

அதன் பின் அந்த வாலிபர் தனது தலையை அந்த பாம்பின் தலையின் மீது வைக்கிறார். பாம்பும் அமைதியாக நிற்கிறது எதுவும் செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.