திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஒரு தொழிலாளி வசித்து வருகிறார். 40 வயதான தொழிலாளிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். தற்போது அவரது வளர்ப்பு மகனுக்கு 21 வயது ஆகிறது. தொழிலாளியின் மகளுக்கு 17 வயது ஆகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் 21 வயதுடைய வாலிபர் தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அவர் உண்மையை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கேவிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.