கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சொல்வது சட்டப்படி குற்றம். ஆனால் விதிமுறைகளை மீறி சிலர் சட்டவிரதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்கின்றனர். அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனியார் மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருந்தக உரிமையாளர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிந்து கொள்ள இவர்கள் 1500 ரூபாய் வசூல் செய்துள்ளனர்.

இதனையடுத்து பெண் குழந்தை என தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய ஒரு லட்ச ரூபாய் வரை பெற்றது போலீசார் நடத்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.