
சீனாவில் அரசு அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து பணி தொடர்பாகவும் அல்லது அலுவலக ரீதியான நட்பை தாண்டி உறவை வளர்த்துக் கொள்வதற்காக இரவு நேர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள்.
இதனால் ஊழல் அதிகரிப்பதாகவும், விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் மர்மமான முறையில் உயிர் இழப்பதாகவும் அரசாங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இதனை அடுத்து சீனா அரசு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சீன அரசு அதிகாரிகள் இரவு நேர விருந்த நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் கலந்து கொள்ளக்கூடாது.
அதிலும் குறிப்பாக 3 மூன்று பேருக்கு மேல் அரசு அதிகாரிகள் ஒரு இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் அந்த முடிவால் வரும் காலங்களில் அரசாங்கம் சார்ந்த ளவு பிரச்சனைகள், ஊழல் குற்றச்சாட்டுகளை தவிர்க்க முடியும் என சீன அரசு தெரிவித்துள்ளது.