சமூக வலைதளங்களில் பலரும் குழந்தைகளை வைத்து வேடிக்கையான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதில் சமீப காலங்களாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோன்று ஒரு நபர் தனது மகனை சிங்கத்தின் மீது உட்கார வைத்து புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு உள்ளார்.

அதனால் தனது குழந்தையை சிங்கத்தின் மீது உட்கார வைக்க முயற்சிக்கிறார். ஆனால் குழந்தை பயத்தில் கதறி அழுதது. இருந்தும் சிங்கத்தின் மீது உட்கார வைக்க குழந்தையை கட்டாயப்படுத்துகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Bad Parenting TV (@badparentingtv)

உடனே சிங்கம் எரிச்சல் அடைந்து வேகமாக தாக்குவது போல் திரும்பியது. பின்னர் அந்த நபர் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

சமூக ஊடக பயனர் ஒருவர் “தனது மகனை தானே ஆபத்தில் சிக்க வைக்கிறார்” என விமர்சித்துள்ளார். மேலும் ஒருவர் “அவரை சிறையில் அடைக்க வேண்டும்” என கடுமையாக கூறியுள்ளார்.