
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிங்கபூர்ணி அம்மன் திருக்கோவிலில் கடந்த திங்கட்கிழமை மதியம் நடந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதியம் சுமார் 1 மணி அளவில் பூசாரி கோயிலின் கருவறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரருடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கோவிலில் இருந்த பக்தர்கள் மத்தியில் குழப்பமும், கவலையும் ஏற்பட்டது.
हिमाचल प्रदेश में माता के गर्भगृह में पुजारी और सुरक्षाकर्मी भिड़े। pic.twitter.com/ntxSuSfRB0
— Priya singh (@priyarajputlive) June 17, 2025
இது போன்ற நிகழ்வுகள் கருவறை போன்ற புனித இடங்களில் நடைபெறுவது பக்தி உணர்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தலைமை பாதுகாப்பு அதிகாரியான ஓய்வு பெற்ற கர்னல் மணீஷ் என்பவர் சம்பவத்தின் போது விடுப்பில் இருந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பான தகவல் அவருக்கு உடனடியாக கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.