
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் கணவனை இழந்த ஒரு 38 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். அந்தப் பெண் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்ட நிலையில் instagram-ல் மாந்திரீக பூஜை தொடர்பான ஒரு வீடியோவை பார்த்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு பூஜை செய்தால் குடும்ப பிரச்சினைகள் தீரும் என இருந்ததால் அதனை அந்த பெண் நம்பி அந்த சாமியாரை தொடர்பு கொண்டார்.
அந்தப் பெண் கேரளாவுக்கு சென்று அந்த மந்திரவாதியை சந்தித்த நிலையில் அவர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும், பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது எனவே அதனை சரி செய்ய பூஜைக்கு 24 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த அர்ச்சகர் அருண் அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை கொடுத்த நிலையில் பின்னர் அவர் பெங்களூருவுக்கு சென்று விட்டார்.
பின்னர் தினசரி இரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கு whatsapp-ல் வீடியோ கால் செய்யும் அருண் நிர்வாணமாக நிற்க வேண்டும் அப்போதுதான் பூஜை செய்ய முடியும் என கூறியுள்ளார். முதலில் அந்த பெண் அதற்கு மறுத்தாலும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்று கூறியதால் பின்னர் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அந்த பெண்ணை அவர் கேரளவிற்கு அழைத்த அந்தப் பெண்ணை அருணும், மற்றொரு அர்ச்சகரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களுடன் உடலுறவு ஈடுபட்டால் பூஜை நிறைவடையும் என அவர்கள் கூறிய நிலையில் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற நிலையில் அவர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு வந்த அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்துள்ளனர்.
மேலும் மற்றொரு நபர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் கைதான நபரிடமிருந்து செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.