
கேரள மாநிலம் மணப்புரம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு குவாரி குளத்தில் அமீனா என்ற பெண் துணி துவைத்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது. அந்த செயினை ஆமினா தேடிப் பார்த்தார். ஆனால் அது கிடைக்கவில்லை.
இத்தனை ஆண்டுகள் கழித்து குளத்தை தூர்வாரும்போது அந்த செயின் கிடைத்தது. 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் அந்த செயினை மீட்டு உரிமையாளர் ஆமினாவிடம் ஒப்படைத்தனர். அப்போது “எத்தனையோ நாட்கள் தேடி எவ்வளவோ பிரார்த்தனைகள் செய்தேன். தற்போது பலன் கிடைத்துள்ளது” என ஆமினா கூறியுள்ளார்