
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12ஆம் தேதி அன்று விமான விபத்து நடைபெற்றது. இதில் மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்நிலையில் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மேல் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மகளின் கனவு பயணம் துயரத்தில் முடித்துள்ளது. குஜராத்தின் ஹிமாத்நகரை சேர்ந்த இளம் பெண் தான் பாயில் காதிக்.
இவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் படிக்க லண்டன் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். அவரது தந்தை சரக்கு ஏற்றும் ஆட்டோ ஓட்டுகிறார். மேலும் உயிரிழந்த மாணவி தான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி என்று உறவினர்கள் கூறினர். இது குறித்து அவரது தந்தை கூறியதாவது, சம்பவத்தன்று காலை 10 மணிக்கு பாயலுக்கு பிரியாவிடை அளித்துவிட்டு இன்ப கனவுகளுடன் வீடு திரும்பினோம். ஆனால் சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானது என்று செய்தி வந்தது.
விபத்தில் ஒரு பயணியை தவிர அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். எனது மகளுடைய மரணம் டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. பாயல் லண்டனில் படிக்க விரும்பினார். அதனால் அவருடைய கல்விக்கு உதவு நாங்கள் கடன் வாங்கிய அவரை அங்க அனுப்பினோம் என்று தந்தை வருத்தத்துடன் தெரிவித்தார்.