மத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த தாக்குதலில் பலரைக் காணவில்லை, மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் விவசாயிகளை குறி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாய சமுதாயங்கள் இடம் பெயர்ந்து அப்பகுதியில் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படலாம். இந்த மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுமார் 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். இவை பெரும்பாலும் இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களாகும். கடந்த மாதம் பென்யூவில் 42 விவசாயிகள் மேய்ச்சல்காரர்களால் கொல்லப்பட்டனர். இதனால் நைஜீரியாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.