ஒரு சாலையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, ஒரு தனிமனிதர், சாலை நடுவே சரிந்து விழும் நிலையில், சுமார் ஏழு கடும் ஆவேசமான தெருநாய்களுடன் போராடும் சோகமான காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரு கணத்தில் உயிரிழப்பாக மாறியிருக்கும் இந்த சம்பவம்,  அந்த நேரத்துக்கு வந்த ஒரு காரால் தடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் ஒரு தனிமனிதரின் உயிருக்கு தெரு நாய்களால் எவ்வளவு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான உணர்ச்சிமிகு சாட்சி. சாலையில் யாரும் இல்லாத நேரம், அந்த நபர் பை மற்றும் பேக்  மட்டுமே கொண்டு, பைத்தியக்காரமாக குரைத்துக் கொண்டிருந்த நாய்களிடம் இருந்து தன்னை காக்க முயற்சிக்கிறார். அந்த நபரை தெருநாய்கள் கூட்டமாக துரத்திய நிலையில் அவர் ஒரு பெல்டால் அதனை விரட்டியவாறு ஓடினார்.. ஆனால் நாய்களின் எண்ணிக்கையும் வன்முறையும் அதிகரிக்க, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்.

 

 

சற்று நேரத்தில் நாய்கள் மேல் பாய முயற்சிக்கின்றன. உயிர் உண்டோ இல்லையோ என்ற பயத்தில் அவர் மீண்டும் எழுந்து போராட ஆரம்பிக்கிறார். அந்நேரம் திடீரென ஒரு கார் ஹெட்லைட்டுடன் அந்த இடத்திற்கு வந்தது. ஒளி மற்றும் சத்தம் கேட்டவுடன் நாய்கள் பயந்து ஓடிவிடுகின்றன.

கார் ஓட்டுநர் காரை நிறுத்தி அந்த நபரிடம் நலமா என கேட்கிறார். அந்த நபர் சுவாசம் பிடித்தபடியே தலையசைத்து நன்றாக இருக்கிறேன் என கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது நகரங்களில் அதிகரித்து வரும் தெருநாய் தாக்குதல்களின் மீதான கவனத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடமாடும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் இந்த வீடியோவை பார்த்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.