வேளாண் சாரா துறைகளுக்கு இளைஞர்கள் செல்வது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு மாநில திட்டக் குழுத் துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது வேளாண் துறையில் 365 நாள் வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அதேபோன்று அதிக சம்பளம் கொடுக்கும் திறனும் அதில் கிடையாது.

அதனால் தான் வேளாண் அல்லாது துறைக்கு இளைஞர்கள் செல்கிறார்கள் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்சாரா வேலை வாய்ப்புகள் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.