
கேரளாவைச் சேர்ந்த ஐசக் பால் என்பவர் அமீரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு பொறியாளரான ஐசக் தனது விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாட சென்றுள்ளார். அப்போது துபாயின் ஜூமேரா கடற்கரையில் ஸ்கூபா டிரைவிங் செய்த போது நீருக்குள் அவருக்கு மூச்சு விட சிரமமாக இருந்துள்ளது.
இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.