
அமெரிக்காவின் ஒரு பகுதியில், ஒரு குடும்பம் வீடு திரும்பியபோது, அவர்கள் செல்லப்பிராணியான நாய் காணாமல் போனது. ‘லேடி’ என அழைக்கப்படும் அந்த நாயை எங்கு தேடியும் காணவில்லை. பின் அவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல், அந்த நாய் வீட்டு பின்புறம் உள்ள 35 அடி உயரமான ஒரு மரத்தின் மேலே, கிளையில் சிக்கிய நிலையில் இருந்தது.
View this post on Instagram
மே 22ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், கீழிருந்து குடும்பத்தினர் ஆச்சரியமாக உற்றுப் பார்ப்பது, மரத்தின் மீது வாலை ஆட்டி நாய் உட்கார்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாயை மீட்க ஒருவர் மரத்தில் ஏறி சென்றார்.
Brut America பகிர்ந்த பதிவில், “நாங்கள் தீயணைப்பு துறையையும், விலங்கு மீட்பு அமைப்பினரையும் தொடர்பு கொண்டோம். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை” என்று அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் கூறியுள்ளார். பின் அவர்கள் தாங்களே முயன்று லேடியை பாதுகாப்பாக கீழிறக்கி மீட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டவுடன் பலரும் வியப்பையும் நகைச்சுவையையும் கலந்து கருத்து தெரிவித்தனர். “ஒரு பெரிய வேட்டை பறவையால் தூக்கிச் செல்லப்பட்டு பின் மரத்தில் விழுந்திருக்கலாம்,” என்ற ஒருவர் கூற, “பெரிய வேட்டை பறவைகள் உள்ள இடத்தில் சிறிய நாய்களை தனியாக விடக்கூடாது” என்றும் பலரும் உருக்கமான ஆலோசனைகளும் தெரிவித்துள்ளனர்.