உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒருவரை நடுரோட்டில் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வாலிபரை நடுரோட்டில் ஒரு சுடிதார் அணிந்த பெண் கம்பால் அடிக்கும் நிலையில் மற்றொரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண்ணும் சேர்ந்து தாக்குகிறார். அவர்கள் இருவரும் மாஸ்க் அணிந்திருந்த நிலையில் அந்த வாலிபரை விடாமல் அடிக்கும் நிலையில் அவரும் எதிர்த்து அந்த பெண்களை தாக்க முயற்சிக்கிறார்.

அவர்களுக்குள் தகராறு வெடித்த நிலையில் அனைவரும் வேடிக்கை பார்க்க ஒருவர் மட்டும் வந்து அவர்களை சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்தினார். இந்த பெண்கள் அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கடைக்காரர்களுடன் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.