சீனாவில் தற்போது ஒரு வித்தியாசமான கலாச்சாரம் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஆண்களை கட்டி பிடிக்கிறார்களாம். இப்படி கட்டிப்பிடிக்கும் போது அவர்களின் மன அழுத்தம் சரியாகி ஹார்மோன்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்புகிறார்கள். இது தொடர்பாக ஒரு மாணவி சமூக வலைதளத்தில் பதிவிடவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வாறு பெண்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் நிலையில் ஆண்கள் அதற்காக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெண்கள் ஆண்களை கட்டிப்பிடிக்கும் நிலையில் இந்த ஆண்கள் ஆண் அம்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் சிக்ஸ் பேக்ஸ் உடல் கட்டமைப்புடன் அதாவது நல்ல அழகான மற்றும் நல்ல உடல் கட்டமைப்புடன் இருக்கும் ஆண்களை மட்டும் தான் அவர்கள் கட்டிப்பிடிப்பார்களாம். இப்படி கட்டிபிடிக்கும் போது அவர்களின் மனதும் உடலும் மகிழ்ச்சியை அடைகிறதாம்.

மேலும் இதன் காரணமாக பெண்கள் இதற்காக 50 யுவான் வரை பணம் செலுத்தி அதாவது இந்திய மதிப்பில் 250 முதல் 600 ரூபாய் வரையில் கட்டணம் செலுத்தி சுமார் 5 நிமிடங்கள் கட்டிப்பிடித்து தங்களுடைய மன அழுத்தத்தை குறைத்துக் கொள்கிறார்கள். இதில் வெறும் கட்டிப்பிடிப்பு மட்டுமே இருக்கும் நிலையில் வேறு எந்த விதமான உடல் சார் உறவுகளும் இருக்காது. மேலும் நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் கட்டிப்பிடித்தால் பிரச்சனைகள் சரியாகும் என்று கூறுவது போல் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.