
மதுரை பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட
கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தயாரிப்பதில் இப்படி அலட்சியமாக இருப்பதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் கிடந்ததால் அங்கன்வாடி பணியாளர் கோமதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து அறிந்த உடன் மாவட்ட திட்ட அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.