சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்துல் லத்திப் வாகனத்தை சோதனை செய்தனர்.

சோதனையின் போது அவரிடம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அப்துலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி என்ற பகுதியிலிருந்து போதைப் பொருள்களை அதிக விலைக்கு வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

அப்துலிடம் இருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைது செய்த அப்துல்லாவை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அப்துல் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.