சென்னை மாவட்டத்தில் மூதாட்டியின் காலையில் அரசு பேருந்து ஏறிய விவகாரத்தில் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு ஆட்டு தொட்டி பகுதியைச் சேர்ந்த பேகம் பிபி(61) உறவினர்களை பார்ப்பதற்காக தங்கசாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது அரசு பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் பேருந்து சக்கரம் பேகம் பிபியின் காலில் ஏறியது. இதனால் படுகாயமடைந்து வலியில் அலறி துடித்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு நசுங்கிய நிலையில் உள்ள காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் போக்குவரத்து துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மூதாட்டியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.